Pages

Saturday, June 2, 2012

நானும் ராஜாவும்!



இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்த ஞான சூனியத்தின் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!

ஞானம் என்பதே கொஞ்சம் தாமதமாகத்தானே எல்லோருக்கும் வரும். அது எனக்கும் ஒரு காலத்தில் வரட்டும்.



சின்ன வயசுல இருந்தே எனக்கு பாட்டுன்னா உசுரு. எப்பவும் ஏதாவது அலைவரிசைல பாட்டு வீட்டுல போய்கிட்டு தான் இருக்கும். அப்போ ஏது உருப்படியான தமிழ் தொலைகாட்சிகள் நம்ம நாட்டுல இருந்துச்சு! VCR ல படம் பார்ப்பதோட சரி. ஹையா ரஜினி பாட்டுன்னு ஆடுன பய தானே நான்.

நான் வளர வளர கேக்குற பாட்டுகளும் மனசுக்குள்ள பதிஞ்சிகிட்டே இருந்தது. அதெல்லாம் இந்த இசை மேதையின் பாட்டுன்னு எனக்கு எங்க தெரியும். ஆனா கேட்டுகிட்டு இருந்திருக்கேன். பாட்டு ஞாபகமா பாட தொடங்குன காலத்தில வந்தவரு தான் நம்ம இசை புயல். ரோஜா,ஜென்டில்மேன்,காதலன்னு இசைபுயல் பட்டைய கிளப்பிட்டு இருந்தாரு.முதல் தடவையா புயலு கிராமத்து இசையில கலக்குன கிழக்கு சீமையிலே பட பாட்டு கேசட்ட தேய தேய நாவலப்பிட்டி ல இருந்து கதிர்காமம் வரைக்கும் கேட்டு கேட்டு கடைசில van driver கடுப்பாகி திரும்பி வரும்போது அவரோட கேசட்ட போட்டு நுவரெலியால இருந்து தூங்கவச்சாரே.( ஹீ ஹீ ஹீ)

ரொம்ப சுலபமா பாட்டு எல்லாம் பாடமாகிடும்.(என்ன AL Biology Note மட்டும் பாடமாகாது) ரகுமான் பாட்டு எல்லாம் அத்துப்படி. எல்லா ஆல்பமையும் ஒரு பாட்டு விடாம பாடிகிட்டு வர்றது ( கிட்டத்தட்ட ஒரு MP3 Player கணக்கா) நம்ம பழக்கம்.

ரகுமான் பாட்டு ஸ்கூல் வேன்ல போகும்போதும் விடல.ஜோடி, ஜீன்ஸ், படையப்பா னு ஒரு அல்பமையும் நம்ம Van driver விட மாட்டாரு. காலைல ஒரு பாட்ட கேட்டா அது நாள் முழுக்க நம்ம மனசுக்குள்ள ஓடிகிட்டே இருக்கும்ல, அது மாதிரி கிளாஸ் ரூம்ளையும் பாட்டு தான். மியூசிக் பீரியட் நமக்கு வசதியா போச்சு. ( அதான் இன்னைக்கி வரைக்கும் உருப்படியா சங்கீதம் படிக்கல, OL ல A போட்ட புண்ணியவான் வாழ்க)
இப்போ தான் புயலுக்கு கொஞ்சம் இறங்குமுகம். பாட்டுகளில நம்ம ஈர்க்குற “அட” ன்னு சொல்ல வெக்கிற ஏதோ ஒன்னு குறஞ்சிகிட்டே வந்துது. இப்போ நம்மள ஈர்த்தவரு வித்யாசாகர். எல்லா படத்துலயும் அவரோட மெலடி பாட்டு ஒன்னு இருக்கும் ..ரொம்ப பிடிச்சது... ( ரன் படம், இன்னமும் எனக்கு பிடிச்ச படங்கள்ல ஒன்னு)

இதுக்கு முன்னாடியே டிவி ல சப்தஸ்வரங்கள்,அபூர்வ ராகங்கள் நிகழ்ச்சிகள பார்த்துக்கிட்டு இருந்தப்போ, பாடுரவங்கள்ள இருந்து ஜட்ஜ் பண்ண வர்றவங்க வரைக்கும் இளையராஜா இளையராஜான்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. ( அப்போவும் நாம அதே ஞான சூனியம் தானே).எவ்வளவோ புது பாட்ட நம்ம FM ல ( அப்போ எனக்கு ரேடியோன்னா சூரியன் fm தான்) கேக்குறோம் டிவி ல பாக்குறோம்..இந்த பய பக்கிக ஏன் போயும்போய் ராஜா பாட்ட பாடுரங்கன்னு எனக்கு புரியல.

இந்த காலத்துல நெறைய பழைய பாட்டுகள ரீமிக்ஸ் பண்ணி படம்( பணம்) பண்ணுற ஒரு கும்பல் இருந்தது. இத கேக்கும்போது இருந்த துள்ளலான இசைக்கு நடுவில கேட்பதட்கரிய ஒரு பொக்கிஷம் இருந்தது. அதான் வித்யாச வித்தியாசமான டியுன்கள். என்னை ரொம்பவே சிலாகிக்க வெச்சது. (லேட் பிக்கப் டா நீயி)..கேக்கும்போது சுலபமா இருந்தாலும் பாடும்போது தான் அந்த கஷ்டம் தெரிஞ்சுது.நெறைய நண்பர்கள் கிட்ட இப்பவும் சொல்லி இருக்கேன், இந்த மனுஷனோட ட்யூன்லாம் கத்தி மேல நடக்குற மாதிரி. உருப்படியா பாடலன்னா டியுனே மாறிடும்). ரேடியோல அறிவிப்பாளர் இது யார் இசையமச்ச பாட்டுன்னு சொல்லுறதுக்கு முன்னாடியே கண்டுபிடிக்கிற பாட்டுன்னு சொல்லும் தெறம (????) வந்தத அப்பத்தான் உணர்ந்தேன்.

 நம்மள ஆரம்ப காலத்துல ஈர்த்தவாளோட ட்யூன் பல்லவில மட்டுமே எடுப்பா இருக்க, சரணத்திலையும் வரிக்கு வரி வித்தியாசம் வித்தியாசமான அழகான இசைக்கோர்வைகள் எனக்கு ஜென்ம சாபல்யம் கொடுத்தது. இதுக்கெல்லாம் சொந்தகாரர் நம்ம பண்ணைபுரம் பகவான் தான் பான்னு தெரிஞ்சதும் தேடி தேடி பழைய பாட்டுகள (ரீமிக்ஸ் களின் உண்மை வடிவம்) கேக்க கேக்க..இதுதாண்டா இசைன்னு சொல்லவச்சது. பாட்டு மட்டும் இல்லாம நடுவில வர்ற இசையமைப்புகளும் அப்படியே கட்டிபோட்டுச்சு.

படங்கள்ல பாட்டுக்கு போடுறது மட்டும் இல்ல பின்னணி இசையும் எவ்வளவு முக்கியம்னு தெரிஞ்சிகிட்ட காலம் இதுதான். எவ்வளவு அழகான இசை சேர்க்கைகள். BGM (Back ground Music) ல அடிச்சிக்க இந்தாளுக்கு ஈடா இன்னொருத்தன் பொறந்து வரணும்யா.(முக்கியமா மௌன ராகம் தீம் மியூசிக், புன்னகை மன்னன் தீம் மியூசிக் ( இது ரஹ்மானாமே). காட்சி சுமாரா இருந்தாலும் அதுக்கு இவர் போடுற டியூன் உலகதரம்..இவர் இசைக்காகவே பல படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்குன்னா பாருங்க...
பாடகர்களுக்கு இவர் போடும் ட்யூனை மட்டுமே போதுமானது..வேறெந்த IMPROVISATION உம தேவைப்படாது. இத அவர்களே சொல்லி இருக்காங்க.சூப்பர் சிங்கர் ( விஜய் டிவி) ல பாடுற பாடகர்கள் இவர் புகழ் பாட பாட..நடுவுல நம்ம கெளதம் மேனன் படங்கள்ல வர்ற ஹீரோக்களும் இவர் புகழ் பாட பாட., ம்ம்ம் நாம இப்போ தான் சரியான பாதையில போறோம்குறத உணர்த்துச்சு.

மனுஷன் 80 களில்நீதானே என் பொன்வசந்தம் போட்ட ட்யூன்கள் பிரமாதமா இருந்ததுக்கும் 90 களுக்கு அப்புறமா கொஞ்சம் சறுக்கினதுக்கும் காரணம் நல்ல வேலை வாங்க தெரிந்த இயக்குனர்கள் இவரிடம் சிக்காமைன்னு நினைக்கிறேன்..இவர் மாதிரி ஒருத்தர் கிட்ட இப்படி ட்யூன் போடு அப்படி போடுன்னு சொல்ல தான் முடியுமா?
நீதானே என் பொன்வசந்தம்..ரொம்ப நாளைக்கு அப்புறம் ஞானிஇடம் வேலை வாங்க தெரிஞ்ச ஒரு இயக்குனர் மாட்டி இருக்காரு..பாட்டெல்லாம் கண்டிப்பா காலை வாராதுன்னு நம்புறேன் பா.. (Trailerum, Music promo வும் புதுமையா இருந்தது, நம்பிகையைப் பலப்படுத்துது)

டிஸ்கி1: என் IPOD காணாம போன நாள் என்ன ரொம்பவே உலுக்கிடுச்சு..கஷ்டபட்டு அழகழகா ராஜா பாடல்கள PLAYLIST போட்டு வெச்சிருந்தேன்..தூக்குனவன் எங்க இருந்தாலும் நல்லா(நறநற) இருப்பான்..இப்போ தான் நிம்மதியா இருக்கேன்..(ஏதோ போன்லயாவது கேக்க முடியுதே)

டிஸ்கி 2: பாடல்கள அழகான பாடல்கள்னு சொல்ல கூடாதாம் ..இனிமையான பாட்டுன்னு தான் சொல்லனுமாம்..எனக்கு இதுல கொஞ்சமும் உடன்பாடு கிடையாது..இந்த மேதயோட மணி மணியான இசையமைப்புகள் கேட்பதற்கு மட்டும் இல்ல..எல்லா புலனங்கத்துக்கும் தான்..அந்த அழக அனுபவிச்ச தான் புரியும்...







Friday, May 4, 2012

வட்டார மொழி வழக்கு


ரொம்ப நாளைக்கி அப்புறமா ஒரு பதிவ போடுறதுக்கு இப்போ தான் நேரம் கெடச்சிருக்கு. இதுக்கு முந்தைய பதிவுக்கு கிடைச்ச வரவேற்பு அமோகமா இருந்ததுப்பா. (எத்தன பேரு நம்ம blogல பின்னூட்டம் போட்டுருகாங்கன்னு தெரியுது இல்ல..ஆனா முகபுத்தகத்தில ஓரளவு பரவாயில்ல ன்னு சொல்லுற அளவுக்கு பாராட்டு வந்திருந்தது)..நாமளும் கைததட்டுகு ஏங்குற ஜாதி தானே.

அப்பப்ப இருக்கிற சூடான விஷயங்கள போடணும்னு நினைக்கிற போதெல்லாம் ஏதாவது இடையூறு வந்துரும். இன்னக்கி நான் எழுத நினச்ச விஷயம் போன வருஷம் என் முகபுத்தகத்தில கேட்டிருந்த கேள்வி சம்பந்தமான ஒரு அலசல்.

ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசமுடியாமல் இருப்பதற்கு காரணம் என்னன்னு கேட்டிருந்தேன். அதுக்கு நான் கொடுத்திருந்த 3 தெரிவுகள் இவைதான். முதலாவது நம்முடைய வட்டார மொழி வழக்குல பேசுறதுக்கு தயக்கம் காட்டுறது, ரெண்டாவது ஆங்கிலம் கலந்து பேசுறத பெருமையா நினைக்கிறது, மூணாவது தமிழில அந்த குறிப்பிட்ட ஆங்கில வார்தைகுரிய சொல் கொஞ்சம் செயற்கையா உபயோகிக்கிறது கஷ்டமா இருப்பதுன்னு மூணு தெரிவு கொடுத்திருந்தேன். இந்த கேள்விக்கு வந்த பதில்களும் நம்ம போன பதிவுக்கு கெடச்ச மாதிரியே ரொம்ப குறைவாகவே இருந்தது. (கொஸ்டின் கஷ்டமா பாஸ்)

இனி இந்த கேள்விய நான் ஏன் கேட்டேங்குறதுக்கு விளக்கம் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். நம்ம தமிழில பேச்சு வழக்கு எழுத்து வழக்குன்னு ரெண்டு வகை இருக்கிறது என்ன பொறுத்தவரைக்கும் பெரிய ஒரு விஷயம். சிறப்புன்னு கூட சொல்லலாம். எனக்கு தெரிஞ்சவரைக்கும் வேற மொழிகளில் இந்த அளவுக்கு சிக்கலான, இடத்துக்கு இடம், மாவட்டத்துக்கு மாவட்டம், நாட்டுக்கு நாடு வித்யாசமான பேச்சு வழக்கு இருப்பது தமிழிலயா தான் இருக்கும்.( வேற மொழிகளில் இவ்வளவு வெவ்வேறு பட்ட பேச்சு வழக்கு இருந்தா தயவு செஞ்சு பின்னூட்டத்துல போடுங்க. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆங்கில உச்சரிப்பு வித்யாசம் கொஞ்சம், கிரிக்கட் போட்டி பாக்குறதனால தெரியும். நம்ம Richie Benaud, David Lloyd பேசும் ஆங்கிலம் செம சுவாரஸ்யமா இருக்கும்)


முதல்ல நம்ம நாட்டுல இருந்தே ஆரம்பிக்கிறேன். இங்கே பேசும்( கதைக்கும், இந்த கதைக்கும் என்கிற வார்த்தை இலங்கையில் தான் இருக்கிறதா நினைக்கிறேன், கவிதாயினி தாமரை புண்ணியத்துல 2 பாட்டுல வருது, கண்டுபிடிங்க (தெனாலி தவிர்த்து)) தமிழ்ல ஒவ்வொரு மாகாண ரீதியா பார்க்கும்போது வித்தியாசம் நல்லாவே தெரியுது. யாழ்ப்பாணத்தில் பேசும் தமிழ், மட்டகளப்பில் பேசும் தமிழ், கொழும்பு தமிழ், மலையக தமிழ், முஸ்லிம்கள் பேசும் தமிழ்( இதில கிழக்கு மாகாணத்து முஸ்லிம்களின் தமிழ், ஏனைய மாகாணத்து முஸ்லிம் மக்கள் பேசுவதிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கும் இருக்கும்). உச்சரிப்பு, வார்த்தை பிரயோகம், தொனி, சுருதி அது இதுன்னு எல்லாத்துலயும் நீங்க ஒரு வித்தியாசத்த உணர்வீங்க.


அப்டியே தமிழ்நாட்டு பக்கம் போனா, அப்பாடி எவ்வளவு வித்தியாசம் இருக்குது. திருநெல்வேலி,மதுரை,சென்னை,தூத்துக்குடி,கோயம்புத்தூர் அப்படின்னு ஒவ்வொரு பகுதிக்கும் நல்ல வித்யாசம் தெரியிற மாதிரி மொழி வழக்கு இருக்குது. பாலக்காடு, ராயபுரம் இந்த பகுதிகள்ல பேசுற தமிழும் வித்யாசம். ( எனக்கு தெரிஞ்சுது இவ்வளவு தான், தயவு செஞ்சு தென்னிந்திய நண்பர்கள் உதவட்டும்). என்னென்ன வித்யாசம் ஒவ்வொரு மொழிவழக்குலயும் இருக்கிங்கிரத பார்ப்பதை விட நான் சொல்ல போகும் விஷயம் எனக்கு முக்கியமா தோணுது.


இப்போ விஷயத்துக்கு வருவோம். இப்படி ஒவ்வொரு பகுதிலயும் பேசுற தமிழ் வித்தியாசப்பட்டு இருப்பது உண்மையிலேயே ஒரு அழகான விஷயம். அவங்க பேசும் தமிழில அந்த மண்ணுடைய வாசம் வீசும் பாருங்க! அதில இருக்குற சுகமே தனி! ஒரு ஊர்ல அவிங்க இவிங்கன்னா இன்னொரு ஊருல அங்கிட்டு இங்கிட்டு, இன்னும் கொஞ்சம் அங்கனகுள்ளே, அவ்விடதடியில,அவ்விடத்த.இப்படி ஏகப்பட்ட வேறுபாடு. இந்த பல்வகைமைய நாம ரசிக்க பழகனும்குறேன்.


சரி இதுல எங்க ஆங்கில கலப்பு வருதுன்னு பாருங்க. இப்போ ஒரு பிரதேசத்துல வாழுற ஒரு தமிழர் இன்னொரு பகுதிக்கு போனா அவர் தன்னுடைய சொந்த வட்டார மொழி வழக்குல பேசுனா ஏதும் தப்பா நினைப்பாங்கலோன்னு அவங்க ஊர் பாஷையில பேசாம, வந்து சேர்ந்திருக்குற பிரதேசத்து தமிழல பேச நினைக்கும்போது பிரச்சனை தொடங்குது. சிலருக்கு இப்படி வேற ஊர்காரன் நம்ம கிண்டல் அடிக்கிறான்னு தப்ப நினைக்க வாய்ப்பிருக்கு( இது நான் கண்ட உண்மை). இங்க தான் அவன் சில பொதுவான வார்த்தைகளுக்காக ஆங்கிலத்த நுழைக்கிறான். (சில அத்யாவசியமான வெளிநாட்டு கண்டுபிடிப்புகளுக்கு ஆங்கிலத்துல சொல்றதே உசிதம்).அது அப்டியே காலபோக்கில எது சரியான தமிழ வார்த்தைந்குறதே மறக்குற அளவுக்கு ஆயிடுது.( ஆதித்யா நகைச்சுவை அலைவரிசைல, போற சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சிய பார்த்தா புரியும்,இது எவ்வளவு பிரச்சனையிருக்குன்னு).ஆங்கிலம் மட்டுமிலாம, சிங்களம் (புடுவ என்னும் சிங்கள சொல் புடுவம் ஆனது( நாற்காலி),மலையாளம், சமஸ்கிருதம்னு எல்லாம் கலந்தே இருக்கு.


நான் சொல்ல வர்றது இதுதான். நம்ம வட்டார மொழி வழக்குல பேச வெக்கபடாதிங்க.அவங்களுடைய ஊர் பாஷையில பேசுனா தான் மதிப்பாங்கன்னு தப்பு கணக்கு போடாதிங்க. எந்த மொழிவழக்கும் எதற்கும் குறைஞ்சது கிடையாது. மத்தவன் பேசும தமிழ கிண்டல் அடிக்காதீங்க. இது கடைசில நம்ம தலையில நாமே மண்ணை அள்ளி போட்டுகொள்றதுக்கு சமம்.


ஆங்கிலத்த கலந்து பேசுனா தான் மரியதைங்குறது முட்டாள்தனம். தமிழில அதற்கு ஈடாக எல்லோரும் பாவிக்கக்கூடிய எளிமையான வார்த்தை இல்லாதப்போ ஆங்கிலத்த பாவிங்க. அதுக்காக வெள்ளைகாரன் கண்டுபிடிக்கிறது எல்லாதையுமே தமிழுக்கு மாற்றி ஆகணும்னு நினைக்கிறதும் சாத்தியமில்லாத ஒரு விஷயம். ஆங்கிலத்துல பேசுனா அவன் அறிவாளி ஆகிடுவானா?


தமிழில இலக்கிய நூல்களில் வட்டார மொழிவழக்கு சம்பந்தமா பல நாவல்களை அடையாளம் காட்டலாம். சிறுகதைகள், நாவல்களில் எந்த பிரதேசத்தை களமா எடுத்திருக்காங்களோ அந்த மொழி வழக்கு அங்கே பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனா அந்த உச்சரிப்பு, தொனி, சுருதி மாதிரியான விஷயம் எல்லாம் பேச பேச தான், நிலைச்சு நிக்கும்.( நாட்டார் பாடல் மாதிரி தான்)அடுத்த சந்ததி மொத்தமா தமிழ மறக்குறதுக்கு முன்னாடியே இப்படியான ஒரு விழிப்புணர்வு நம்ம மனசுல இருக்கணும். இதுதான் என்னுடய தாழ்மையான கருத்து.